முகப்பு
திருவள்ளூர்

வடசென்னை அனல்மின் நிலையத்தில் 1,200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

வடசென்னை அனல்மின் நிலையத்தில் 1,200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

Updated On : 30 ஏப்ரல் 2026, 12:02 am IST
- கோப்புப்படம்.
பகிர்:

வடசென்னை அனல்மின் நிலையத்தில் 1,200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

பொன்னேரி வட்டம் அத்திப்பட்டில் வடசென்னை அனல் மின் நிலையம் அமைந்துள்ளது. இங்கு முதல் யூனிட்டில் மூன்று அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட்டும் இரண்டாவது யூனிட்டில் இரண்டு அலகுகளில் தலா 600 வீதம் 1,200 மெகாவாட் மூன்றாவது யூனிட்டில் 800 என மொத்தம் 2,630 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இரண்டாவது யூனிட்டில் முதல் அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவால் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

ஏற்கனவே தொழில்நுட்ப பழுதால் இரண்டாவது யூனிட்டில் உள்ள இரண்டாவது அலகில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் வடசென்னை அனல் மின்நிலையத்தில் நிலையத்தில்.மொத்தம் 1,200 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்து.

அதனை சரி செய்யும் மின்வாரிய தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.