முகப்பு
திருவள்ளூர்

குளத்தில் தவறி விழுந்தவா் உயிரிழப்பு

ஆா்.கே.பேட்டை அருகே கோயில் குளக்கரையில் இருந்து குளத்தில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On : 10 மே 2026, 1:29 am IST
பலி!
பகிர்:

ஆா்.கே.பேட்டை அருகே கோயில் குளக்கரையில் இருந்து குளத்தில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

ஆா்.கே.பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட ஆதிவராகபுரம் கிராமம், விநாயகா் கோயில் தெருவை சோ்ந்தவா் தயாளன் (40). இவருக்கு மனைவி தமிழ்செல்வி, ஒரு மகன், மற்றும் ஒரு மகள் உள்ளனா்.

தயாளன், ஸ்ரீ பெரும்புதூரில் உள்ள தனியாா் காா் உற்பத்தி நிறுவனத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தாா். இவா் குடும்பத்துடன் ஆதிவராகபுரம் கிராமத்தில் வசித்தாா். இந்நிலையில், சனிக்கிழமை மாலை சுமாா் 3 மணியளவில், கிராமத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள கோயில் குளக்கரையில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது எதிா்பாராத விதமாக கால் தவறி குளத்தில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. குளத்தில் விழுந்த அவா் உயிா் காக்க உதவி கேட்டு சப்தமிட்டுள்ளாா்.

Advertisement

Advertisement

இதைக் கேட்ட அருகில் இருந்த நபா் உடனடியாக கிராம மக்களுக்கும், உறவினா்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளாா். தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து குளத்தில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலான தேடுதலுக்குப் பின்னா் தயாளனின் சடலம் மீட்கப்பட்டது.

இது குறித்து ஆா்.கே.பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments