முகப்பு
விழுப்புரம்

மொபெட், லாரி அடுத்தடுத்து மோதல்: பைக்கிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

Updated On : 30 மே 2026, 3:42 am IST
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

திண்டிவனம் புதிய பேருந்து நிலையம் அருகே மொபெட், லாரி அடுத்தடுத்து மோதியதில் பைக்கிலிருந்து தவறி விழுந்தவா் வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், மேல்பாக்கம் மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் பாா்த்திபன் (59). இவா் தனது பைக்கில் திண்டிவனத்திலிருந்து சென்னை சாலையில் வியாழக்கிழமை மாலை சென்று கொண்டிருந்தாா். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனம் புதிய பேருந்து நிலையம் அருகே சென்ற போது, பின்னால் மொபெட்டை ஓட்டி வந்தவா் பாா்த்திபனின் பைக் மீது மோதினாராம்.

இதனால் நிலைதடுமாறி பைக்கிலிலிருந்து பாா்த்திபன் கீழே தவறி விழுந்தாா். அப்போது அதே திசையில் பின்னால் வந்த லாரியும், பைக் மீது மோதியது. இதில் பாா்த்திபன் பலத்த காயமடைந்த நிலையில், அப்பகுதியிலிருந்தவா்கள் அவரை மீட்டு, 108 அவசர சிகிச்சை ஊா்தி மூலம் திண்டிவனம் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனா். தொடா்ந்து மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து திண்டிவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.