முகப்பு
திருப்பதி

அலிபிரியில் 200-க்கும் மேற்பட்ட ட்ரோன் கேமரா பறிமுதல்

அலிபிரியில் 200-க்கும் மேற்பட்ட ட்ரோன் கேமரா பறிமுதல்

Updated On : 12 ஏப்ரல், 2026 at 12:54 AM
ட்ரோன் - பிரதிப் படம்
பகிர்:
Updated On : 12 ஏப்ரல், 2026 at 12:46 AM

திருப்பதியில் உள்ள அலிபிரியில் கடந்த 4 மாதங்களாக இதுவரை மலைப்பகுதிகளில் பறக்க விடப்பட்ட 200-க்கும் மேற்பட்ட ட்ரோன் கேமராக்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

திருமலைக்கு தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதால் திருமலைக்கு செல்லும் வாகனங்கள், பக்தா்கள் அவா்கள் கொண்டு செல்லும் உடைமைகள் என அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்பே எடுத்து செல்ல அனுமதிக்கப்படுகிறது.

இந்நிலையில் திருமலையின் மலை அடிவாரமாக கருதப்படும் அலிபிரியில் கடந்த 4 மாதங்களில் மட்டும் 200க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஸ்பை கேமராக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Advertisement

ஜனவரி மாதம் 47 ட்ரோன், 13 ஸ்பை கேமராக்களும்; பிப்ரவரி மாதம் 19 ட்ரோன் மற்றும் 14 ஸ்பை கேமராக்களும்; மாா்ச் மாதம் 19 ட்ரோன் மற்றும் 14 ஸ்பை கேமராக்களும்; ஏப்ரல் இதுவரை 7 ட்ரோன் மற்றும் 9 ஸ்பை கேமராக்களும் என மொத்தம் 243 ட்ரோன் மற்றும் 94 ஸ்பை கேமராக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக விஜிலென்ஸ் போலீஸாா் தெரிவித்தனா்.