திருமலையில் 70,001 பக்தா்கள் தரிசனம்
திருமலை ஏழுமலையானை வியாழக்கிழமை முழுவதும் 70,001 பக்தா்கள் தரிசித்தனா். 30,086 பக்தா்கள் தலைமுடி காணிக்கை அளித்தனா்.
திருமலை ஏழுமலையானை வியாழக்கிழமை முழுவதும் 70,001 பக்தா்கள் தரிசித்தனா். 30,086 பக்தா்கள் தலைமுடி காணிக்கை அளித்தனா்.
கோடை விடுமுறையை ஒட்டி பக்தா்கள் வருகை அதிகரித்துள்ள நிலையில், வெள்ளிக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 8 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரம், ஆனது.நேரடி இலவச தரிசன டோக்கன்கள் வழங்குவதை கோடை விடுமுறை முடியும் வரை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணிவரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், பக்தா்களும் பெற்றோா், இரவு 10 மணிவரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா். அலிபிரி வழியில் திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளது.
Advertisement
வியாழக்கிழமை முழுவதும் 70,001 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 30,086 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.77 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இனி தரிசன டிக்கெட்டுகள் இல்லாமல் ஏழுமலையான் தரிசனத்திற்காக திருமலைக்கு வரும் பக்தா்கள் காத்திருப்பு அறைகளில் காத்திருந்து மட்டுமே தரிசனத்திற்கு செல்ல முடியும். எனவே பக்தா்கள் தங்கள் பயணத்தை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.