முகப்பு
திருவண்ணாமலை

மாணவரை தாக்கியதாக ஆசிரியை மீது புகார்

வந்தவாசியில் ஆசிரியை தாக்கியதாகக் கூறி பள்ளி மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Updated On : 5 ஏப்ரல் 2018, 9:43 am IST
பகிர்:

வந்தவாசியில் ஆசிரியை தாக்கியதாகக் கூறி பள்ளி மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வந்தவாசி கே.எஸ்.கே. நகரைச் சேர்ந்தவர் முஹம்மது அலி மகன் ரஷீத்அல்சையத்(12). இவர் வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 7-ஆவது வகுப்பு படித்து வருகிறார். இவர் புதன்கிழமை வகுப்பில் இருந்தபோது அந்த பள்ளியில் சிறப்பு ஆசிரியையாக பணிபுரியும் ஒருவர் இவரை தலையில் கொம்பால் தாக்கினாராம். 
இதில் தலையில் காயமடைந்த ரஷீத்அல்சையத் வந்தவாசி அரசு மருத்துவமனையில் புதன்கிழமை மாலை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 
இதுகுறித்து வந்தவாசி தெற்கு போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments