முகப்பு
திருவண்ணாமலை

பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற முன்னாள் படை வீரர்களின் பிள்ளைகளுக்குப் பரிசு

திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற முன்னாள் படை வீரர்களின் பிள்ளைகளுக்கு பரிசு வழங்கப்படவுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.

Updated On : 23 ஜூலை 2018, 9:59 am IST
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற முன்னாள் படை வீரர்களின் பிள்ளைகளுக்கு பரிசு வழங்கப்படவுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2017 - 18ஆவது கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதல் 2 இடங்களைப் பெற்ற முன்னாள் படை வீரர்களின் பிள்ளைகளுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படும்.
எனவே, பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற தங்களது வாரிசுகளின் மதிப்பெண் பட்டியல், தங்கள் அசல் படை விலகல் சான்று, அடையாள அட்டையுடன் வரும் 31-ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் அலு வலக வளாகத்தில் இயங்கும் மாவட்ட முன்னாள் படை வீரர் 
நல உதவி இயக்குநர் அலு வலகத்தை முன்னாள் படை வீரர்கள் அணுகலாம் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments