வேட்டவலத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்
வேட்டவலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாமில் 60 பேர் அறுவைச் சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர்.
வேட்டவலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாமில் 60 பேர் அறுவைச் சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம், வேட்டவலம் லயன்ஸ் சங்கம், வேட்டவலம் கே.டி.ஆர். குரூப் நிறுவனங்கள், புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இந்த முகாமை நடத்தின. முகாமுக்கு மாவட்ட லயன்ஸ் சங்கத் தலைவர் பி.இளங்கோவன் தலைமை வகித்தார்.
மாவட்டத் தலைவர்கள் அரங்கநாதன், துரை.சண்முகம், யோகமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். லயன்ஸ் மாவட்டத் தலைவர் டி.ரமேஷ் வரவேற்றார். முகாமில், வேட்டவலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 350-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர்.
இவர்களுக்கு கண்புரை, கிட்டப் பார்வை, தூரப் பார்வை, வெள்ளெழுத்து போன்ற பார்வை குறைபாடுகள் தொடர்பான பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதில், 60 பேர் அறுவைச் சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டு, புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
முகாமில், லயன்ஸ் சங்க நிர்வாகிகள் விக்டர், மணிகண்டன், கிருஷ்ணமூர்த்தி, ராஜேஷ், பிரான்சிஸ், ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.