முகப்பு
திருவண்ணாமலை

வெம்பாக்கத்தில் ரத்த தான முகாம்

செய்யாறை அடுத்த வெம்பாக்கத்தில் ரத்த தான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 5 நவம்பர் 2018, 9:28 am IST
பகிர்:

செய்யாறை அடுத்த வெம்பாக்கத்தில் ரத்த தான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
 தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியும், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறையும் இணைந்து நடத்திய இந்த முகாம், வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் நடைபெற்றது.
 தொடர்ந்து 4-ஆவது ஆண்டாக நடைபெற்ற ரத்த தான முகாமுக்கு வெம்பாக்கம் அரசு பொது மருத்துவமனை மருத்துவர் புகழேந்தி தலைமை வகித்தார்.
 வெம்பாக்கம் வட்டார மருத்துவ அலுவலர் வி.என்.பத்மபிரியா முன்னிலை வகித்தார். வட்டாரச் செயலர் க.சரவணன் வரவேற்றார்.
 காஞ்சிபுரம் மாவட்ட ரத்த தான மருத்துவர் ஜான்சி தலைமையிலான மருத்துவக் குழுவினர் பங்கேற்று 29 பேர் அளித்த ரத்தத்தை தானமாகப் பெற்றனர். நிகழ்ச்சியில், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் கி.ராமச்சந்திரன், மாவட்ட துணைச் செயலர் வே.சுதாகர், முன்னாள் பொறுப்பாளர்கள் ப.மனோகர், ஆ.தயாளன், அ.சம்பத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் வி.ஜி.ராதாகிருஷ்ணன், சங்க நிர்வாகிகள் கிருஷ்ணன், தா.வெங்கிடேசன், பத்மாவதி, எம்.சத்தியநாதன் ஆகியோர் செய்திருந்தனர்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments