2,372 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 2,372 வாக்குச்சாவடி மையங்களிலும் ஞாயிற்றுக்கிழமை வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 2,372 வாக்குச்சாவடி மையங்களிலும் ஞாயிற்றுக்கிழமை வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் நடைபெற்றது.
மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல் தொடர்பான மனுக்களைப் பெறும் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மொத்தமுள்ள 2,372 வாக்குச்சாவடி மையங்களிலும் இந்த முகாம் நடைபெற்றது.
இதில், ஏராளமான வாக்காளர்களிடம் இருந்து பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல் தொடர்பான மனுக்கள் பெறப்பட்டன. வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை வாக்காளர்கள் பலர் சரிபார்த்துக் கொண்டனர்.