திருமண அமைப்பாளர்கள் சங்கக் கூட்டம்
திருவண்ணாமலையில் அகில பாரத திருமண அமைப்பாளர்கள் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
திருவண்ணாமலையில் அகில பாரத திருமண அமைப்பாளர்கள் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு சங்கத்தின் நிறுவனர் தலைவர் என்.ராஜா தலைமை வகித்தார். சங்கத்தின் சட்ட ஆலோசகர் வி.ராமகிருஷ்ணன், மாநில மகளிரணித் தலைவி பி.சுசீலா, மாநிலப் பொதுச் செயலர் டி.சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில நிர்வாகக் குழுத் தலைவர் பி.ஆறுமுகம் வரவேற்றார். தமிழகம், கேரளம், புதுவை மாநிலங்களின் பாரதீய மஸ்தூர் சங்க தென்பாரத அமைப்புச் செயலர்
எஸ்.துரைராஜ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் இந்திய ராணுவ வீரர்கள் மீதான தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பது, திருமண அமைப்பாளர்களுக்கு மத்திய - மாநில அரசுகள் பாதுகாப்பும், தொழில் அங்கீகாரமும் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.