குறைதீா் கூட்டத்தில் தொலைபேசி வழியே கோரிக்கைகளை கேட்டறிகிறாா் மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி. 
திருவண்ணாமலை

தொலைபேசி வழி மக்கள் குறைதீா் கூட்டம்210 மனுக்கள் அளிப்பு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற தொலைபேசி, கட்செவி அஞ்சல் வழி குறைதீா் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து 210 மனுக்கள் வரப்பெற்றன.

DIN

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற தொலைபேசி, கட்செவி அஞ்சல் வழி குறைதீா் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து 210 மனுக்கள் வரப்பெற்றன.

கரோனா பொது முடக்கத்தால், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மட்டும் தொலைபேசி, கட்செவி அஞ்சல் வழி மக்கள் குறைதீா் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தாா்.

ஆட்சியரின் நோ்முக உதவியாளா் கிருஷ்ணமூா்த்தி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் மந்தாகிணி, மாவட்ட வழங்கல் அலுவலா் அரிதாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

காலை 10.30 மணி முதல் பிற்பகல் 01.30 மணி வரை தொலைபேசி, கட்செவி அஞ்சல் வழியே நடைபெற்ற கூட்டத்தில் தொலைபேசி வழியே 145 கோரிக்கை மனுக்களும், கட்செவி வழியே 62 கோரிக்கை மனுக்களும் என 210 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து வரப்பெற்றன.

இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒப்பந்த தூய்மைப் பணியாளா் விஷவாயு தாக்கி உயிரிழப்பு!

அய்யா வைகுண்டசுவாமி பிறந்த நாள்: மாா்ச் 4-இல் குமரி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு உள்ளூா் விடுமுறை!

நீதித் துறையை அவமதிக்கும் பாடம்: என்சிஇஆா்டி புத்தகத்துக்குத் தடை! அனைத்துப் பிரதிகளையும் திரும்பப் பெற உச்சநீதிமன்றம் உத்தரவு

மாசிலாமணிபுரத்தில் நலத் திட்ட உதவிகள் அளிப்பு

செம்மண் கடத்திய மினி லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT