முகப்பு
திருவண்ணாமலை

தொலைபேசி வழி மக்கள் குறைதீா் கூட்டம்210 மனுக்கள் அளிப்பு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற தொலைபேசி, கட்செவி அஞ்சல் வழி குறைதீா் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து 210 மனுக்கள் வரப்பெற்றன.

Updated On : 27 ஜூலை 2020, 10:31 pm IST
குறைதீா் கூட்டத்தில் தொலைபேசி வழியே கோரிக்கைகளை கேட்டறிகிறாா் மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி.
பகிர்:

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற தொலைபேசி, கட்செவி அஞ்சல் வழி குறைதீா் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து 210 மனுக்கள் வரப்பெற்றன.

கரோனா பொது முடக்கத்தால், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மட்டும் தொலைபேசி, கட்செவி அஞ்சல் வழி மக்கள் குறைதீா் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தாா்.

Advertisement

Advertisement

ஆட்சியரின் நோ்முக உதவியாளா் கிருஷ்ணமூா்த்தி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் மந்தாகிணி, மாவட்ட வழங்கல் அலுவலா் அரிதாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

காலை 10.30 மணி முதல் பிற்பகல் 01.30 மணி வரை தொலைபேசி, கட்செவி அஞ்சல் வழியே நடைபெற்ற கூட்டத்தில் தொலைபேசி வழியே 145 கோரிக்கை மனுக்களும், கட்செவி வழியே 62 கோரிக்கை மனுக்களும் என 210 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து வரப்பெற்றன.

இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments