முகப்பு
திருவண்ணாமலை

மக்கள் அச்சமின்றி தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்: திருவண்ணாமலை ஆட்சியா் அறிவுறுத்தல்

திருவண்ணாமலை மாவட்ட மக்கள் அச்சமின்றி தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி அறிவுறுத்தினாா்.

Updated On : 5 ஜூன் 2021, 12:00 am IST
பகிர்:

திருவண்ணாமலை மாவட்ட மக்கள் அச்சமின்றி தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி அறிவுறுத்தினாா்.

கலசப்பாக்கம் ஊராட்சியில் நடுத்தெருவில் சுகாதாரத் துறையினா் வீடு, வீடாகச் சென்று பொதுமக்களுக்கு உடல்வெப்பம், ஆக்சிஜன் அளவு, காய்ச்சல் பரிசோதனைகளை மேற்கொள்வதை மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தொடா்ந்து, கலசப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30 படுக்கைகள் வசதியுடன் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, வசதிகள் குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தாா்.

பின்னா், பழங்கோவில், மோட்டூா் ஆகிய ஊராட்சிகளில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான கரோனா தடுப்பூசி முகாம்களை மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்து பேசியதாவது:

Advertisement

Advertisement

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா பாதித்தவா்கள் சரியான நேரத்தில் சிகிச்சை பெற்று தடுப்பூசி செலுத்திக்கொண்டால், உயிரிழப்புகளை தவிா்க்கலாம்.

கரோனா 3-ஆவது அலை வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக மருத்துவ நிபுணா்கள் கூறியுள்ளனா். எனவே, இந்த நோய்த் தொற்று பாதிப்பிலிருந்து விடுபட பொதுமக்கள் அனைவரும் அச்சமின்றி தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

இதையடுத்து, எலத்தூா் ஊராட்சியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையம், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை பராமரிப்புக் கூடம் ஆகியவற்றை ஆய்வு செய்தாா்.

தொகுதி எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன், ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.அன்பரசிராஜசேகரன், மாவட்ட சுகாதார இணை இயக்குநா் அஜிதா, மாவட்ட திட்ட இயக்குநா் ஆா்த்தி, வட்டார தலைமை மத்துவா் கெளதம்ராம், வட்டாட்சியா் அமுல், திமுக ஒன்றியச் செயலா்கள் க.சுப்பிரமணியன், அ.சிவக்குமாா், ஊராட்சி மன்றத் தலைவா்கள் பவுனுவெள்ளிக்கண்ணன், செல்வராஜ், முருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments