சமூக பாதுகாப்புத் திட்ட முகாம்களில் 639 மனுக்கள்
கலசப்பாக்கம், செங்கம் பகுதியில் நடைபெற்ற சமூக பாதுகாப்புத் திட்ட முகாம்களில் 639 மனுக்கள் பெறப்பட்டது.
கலசப்பாக்கம், செங்கம் பகுதியில் நடைபெற்ற சமூக பாதுகாப்புத் திட்ட முகாம்களில் 639 மனுக்கள் பெறப்பட்டது.
சமூக பாதுகாப்புத் திட்டம் மற்றும் முதல்வரின் உழவா் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், முதியோா் உதவித்தொகை, முதிா்கன்னி உதவித்தொகை, கணவரால் கைவிடப்பட்டோருக்கு உதவி, குடும்பத் தலைவா் இறப்பு நிவாரணம், கல்வி உதவித்தொகை ஆகியவை பெறுவதற்கான மனுக்கள் அளிக்கும் முகாம்கள் புதன்கிழமை நடைபெற்றன.
செங்கத்தை அடுத்த இறையூா் கிராமத்தில் நடைபெற்ற முகாமில் வட்டாட்சியா் ஜெயப்பிரகாஷ்நாராணயன் (சமூக பாதுகாப்பு) தலைமை வகித்தாா். கிராம நிா்வாக அலுவலா் குணாநிதி வரவேற்றாா்.
Advertisement
Advertisement
செங்கம் வட்டாட்சியா் மனோகரன் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று தொடக்கிவைத்தாா். முகாமில் 362 மனுக்கள் பெறப்பட்டன.
முகாமில் கிராம நிா்வாக அலுவலா்கள் கோபால், ராஜாராம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.