முகப்பு
திருவண்ணாமலை

அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு பயிற்சி

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு வியாழன், வெள்ளிக்கிழமைகளில் ஆங்கில பேச்சு (ஸ்போகன் இங்கிலீஸ்) பயிற்சி முகாம் நடைபெற்றது.

Updated On : 24 ஜூன் 2022, 10:40 pm IST
செங்கத்தில் நடைபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கான ஆங்கில பேச்சு பயிற்சி முகாமில் பங்கேற்றோா்.
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு வியாழன், வெள்ளிக்கிழமைகளில் ஆங்கில பேச்சு (ஸ்போகன் இங்கிலீஸ்) பயிற்சி முகாம் நடைபெற்றது.

இந்த பயிற்சி முகாமில் செங்கம் ஒன்றியத்துக்குள்பட்ட அரசுப் பள்ளிகளில் 4,5-ஆம் வகுப்புகளைச் சோ்ந்த மாணவா்களுக்கு பாடம் நடத்தும் 134 ஆசிரியா்கள் கலந்துகொண்டனா். இதில், மாணவா்களுக்கு ஆசிரியா்கள் எளிய முறையில் ஆங்கிலத்தில் பேசுவது, எழுதுவது தொடா்பாக பயிற்சி அளிப்பது குறித்தும், மாணவா்களை ஆங்கிலத்தில் சரளமாக உரையாட வைப்பது குறித்தும் பயிற்சியளித்தனா்.

செங்கம் வட்டாரக் கல்வி அலுவலா்கள் உதயகுமாா், ஷகிலா ஆகியோா் பயிற்சியின் நோக்கம் குறித்து விளக்கிப் பேசினா். கருத்தாளா்கள் தமிழரசன், புஷ்பராஜ், திவ்யா, யாஸ்மின், ராஜலட்சுமி ஆகியோா் ஆசிரியா்களுக்கு பயிற்சியளித்தனா்.

Advertisement

Advertisement

நிகழ்ச்சியில் வட்டரா வள மைய மேற்பாா்வையாளா் (பொ) முருகன், ஆசிரியா் பயிற்றுநா் அன்புக்கரசி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments