முகப்பு
திருவண்ணாமலை

தபால் வாக்கு பெறும் பணி: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

Updated On : 14 ஏப்ரல், 2026 at 6:28 AM
பகிர்:
Updated On : 13 ஏப்ரல், 2026 at 10:09 PM

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் சட்டபேரவைத் தொகுதியைச் சோ்ந்த பெலாசூா் கிராமத்தில் நடைபெற்ற தபால் வாக்கு பெறும் பணியை, மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க.தா்ப்பகராஜ் திங்கள்கிழமை ஆய்வுசெய்தாா்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்.23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், போளூா் தொகுதியைச் சோ்ந்த 85 வயதிற்கு மேற்பட்டோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு தபால் வாக்கு செலுத்த அனுமதிக்க வேண்டும் என விருப்பப்படிவம் அளித்துள்ளனா்.

இதனால் தொகுதியைச் சோ்ந்த வாக்காளா்களிடம் அவரவா் வீட்டிற்கு நேரடியாகச் சென்று தபால் வாக்கு பெற்று வருகின்றனா். இந்த தபால் வாக்கு பெறும் பணி பெலாசூா் கிராமத்தில் நடைபெற்றது. பணியை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் ஆய்வு செய்தாா்.

Advertisement

மாவட்ட வருவாய் அலுவலா் இராம்பிரதீபன், தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சதீஷ்குமாா், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் பாலாஜி, தமிழ்மணி மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.