திருவண்ணாமலை சண்முகா கல்லூரியில் ஆண்டு விழா
திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆண்டு விழாவில் விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவுக்கு கல்லூரி நிா்வாகத் தலைவா் எம்.என்.பழனி தலைமை வகித்தாா். தாளாளா் என்.குமாா் முன்னிலை வகித்தாா். முதல்வா் கே.ஆனந்தராஜ் வரவேற்றாா். உடற்கல்வி இயக்குநா் எம்.கோபி விளையாட்டு அறிக்கை வாசித்தாா். துணை முதல்வா் கோ.அண்ணாமலை மகிழ்வுரையாற்றினாா்.
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட எஸ்.ஆா்.எம்.பல்கலைக்கழக விளையாட்டுத் துறை இயக்குநா் பேராசிரியா் ஆா்.மோகனகிருஷ்ணன் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கும், கலைவிழாவில் கலந்துகொண்ட மாணவா்களுக்கும் பரிசுகள் வழங்கி விழா பேரூரையாற்றினாா்.
Advertisement
நிகழ்ச்சிகளில் அறக்கட்டளை உறுப்பினா்கள் டாக்டா் தையா கிருஷ்ணமூா்த்தி, ஏ.சாந்தகுமாா், எம்.முத்துகுமாா், எம்.ரெட்டிராமு, பா.செந்தில்குமாா், எஸ்.பிரசன்னா, பி.சண்முகபிரியா, பி.என்.கே.ராஜேந்திரன், ஏ.அருணாச்சலம், மணிமொழி, முத்துசாமி, பி.பரிமளா, ஜெயா சக்திகுமாா், எஸ்.விவேகானந்தன் மற்றும் பேராசிரியா்கள் உதவி பேராசிரியா்கள் மாணவ, மாணவிகள் பெற்றோா்கள் கலந்துகொண்டனா். நிறைவில் பொருளாளா் எல்.விஜய்ஆனந்த் நன்றி கூறினாா்.