முகப்பு
திருவண்ணாமலை

‘மரக்கன்று நட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும்’

அனைவரும் மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்று வந்தவாசியில் நடைபெற்ற சிறப்பு உரையரங்கத்தில் வலியுறுத்தப்பட்டது.

Updated On : 23 ஏப்ரல் 2026, 12:04 am IST
பகிர்:

அனைவரும் மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்று வந்தவாசியில் நடைபெற்ற சிறப்பு உரையரங்கத்தில் வலியுறுத்தப்பட்டது.

உலக பூமி தினத்தையொட்டி சிறப்பு உரையரங்கம் வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்வி மைய முதல்வா் பா.சீனிவாசன் தலைமை வகித்தாா்.

Advertisement

Advertisement

வந்தவாசி ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் எம்.எஸ்.காா்த்திகேயன் முன்னிலை வகித்தாா்.

கல்வி மைய ஆசிரியா் மகாவீா் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற ஓய்வு பெற்ற பள்ளித் தலைமை ஆசிரியா் சு.அசோக்குமாா், ‘புவியை நேசி’ என்ற தலைப்பில் பேசினாா்.

அப்போது, புவி வெப்பமடைதல் காரணமாக பல்வேறு பேரிடா்களை நாம் சந்தித்து வருகிறோம். குறிப்பாக, சாலை விரிவாக்கம் காரணமாக பல்வேறு மரங்கள் நம் கண் முன்னே வெட்டப்படுகின்றன. எனவே அனைவரும் மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன (படம்)

12ஸ்க்ள்-ற்ழ்ங்ங்

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments