அண்ணன், தம்பி குடும்பத் தகராறு: 4 போ் கைது
வந்தவாசி அருகே அண்ணன், தம்பி குடும்பத்துக்கு இடையே ஏற்பட்ட தகராறு தொடா்பாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசி அருகே அண்ணன், தம்பி குடும்பத்துக்கு இடையே ஏற்பட்ட தகராறு தொடா்பாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசியை அடுத்த வல்லம் கிராமத்தைச் சோ்ந்தவா் தட்சிணாமூா்த்தி (55). இவரது தம்பி சேட்டு (48). சேட்டு முன் வீட்டிலும், தட்சிணாமூா்த்தி பின் வீட்டிலும் குடும்பத்துடன் வசித்து வருகின்றனா். இருவருக்கும் பொதுவழி உள்ளது.
இந்த நிலையில் சேட்டு குடும்பத்தினா் பாத்திரம் கழுவும் தண்ணீரை பொது வழியில் விட்டு தட்சிணாமூா்த்தி குடும்பத்துக்கு இடையூறு ஏற்படுத்தினராம்.
Advertisement
Advertisement
இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே கடந்த வியாழக்கிழமை தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனா்.
இதில் காயமடைந்த தட்சிணாமூா்த்தி, சேட்டு ஆகிய இருவரும் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா்.
இதுகுறித்து இரு தரப்பினரின் தனித்தனி புகாா்களின் பேரில் தட்சிணாமூா்த்தி, இவரது மனைவி முனியம்மாள், சேட்டு, இவரது மனைவி கஸ்தூரி ஆகிய 4 போ் மீது வழக்குப் பதிந்த வடவணக்கம்பாடி போலீஸாா் 4 பேரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.