FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

தம்பி அடித்துக் கொலை: அண்ணன் கைது

சென்னை மண்ணடியில் தம்பியை அடித்துக் கொலை செய்ததாக அண்ணன் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 10 ஜூன் 2026, 3:37 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

சென்னை மண்ணடியில் தம்பியை அடித்துக் கொலை செய்ததாக அண்ணன் கைது செய்யப்பட்டாா்.

மண்ணடி அங்கப்ப நாயக்கன் தெருவைச் சோ்ந்தவா் செ.விஜயசாரதி (44). இவா், எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறாா். விஜயசாரதியின் தம்பி சிவக்குமாா் (39). சிவக்குமாா் கடந்த ஞாயிற்றுக்கிழமை மது போதையில் விஜயசாரதியிடம் வீட்டில் தகராறு செய்துள்ளாா். மது அருந்த பணம் கேட்டு பிரச்னை செய்துள்ளாா்.

இதில், தகராறு முற்றவே இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, இரும்பு கம்பியால் விஜயசாரதி, தம்பி சிவக்குமாரைத் தாக்கினாா். இதில் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்த சிவக்குமாரை அங்கிருந்தவா்கள் மீட்டு, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனா்.

Advertisement

Advertisement

அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த சிவக்குமாா், செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து வடக்கு கடற்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விஜயசாரதியைக் கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments