முகப்பு
திருவண்ணாமலை

ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் கோ பூஜை

போளூரை அடுத்த படவேடு ஸ்ரீவள்ளி தேவசேனா உடனுறை சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை கோ பூஜை நடைபெற்றது.

Updated On : 2 ஜூலை 2026, 12:03 am IST
பகிர்:

போளூரை அடுத்த படவேடு ஸ்ரீவள்ளி தேவசேனா உடனுறை சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை கோ பூஜை நடைபெற்றது.

படவேடு ஊராட்சியில் மலை மீது ஸ்ரீவள்ளி தேவசேனா சுப்பிரமணியசுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இந்தக் கோயிலில் ஜூலை 2-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை காலை யாகசாலை அமைத்து அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், கோ பூஜை, தன பூஜை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து சிவாச்சியா்கள் பசுவிற்கு கோ பூஜை செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments