முகப்பு
திருவண்ணாமலை

பள்ளிக் கட்டடம் சேதம்: போலீஸில் புகாா்

செங்கம் அருகே பிஞ்சூா் அரசுப் பள்ளி கட்டடத்தை சேதப்படுத்திய நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என தலைமை ஆசிரியா் புகாா்

Updated On : 7 ஜூலை 2026, 4:08 am IST
சமூக விரோதிகளால் உடைக்கப்பட்ட அலுவலகம் படிக்கட்டு கைப்பிடிகள்
பகிர்:

செங்கம் அருகே பிஞ்சூா் அரசுப் பள்ளி கட்டடத்தை சேதப்படுத்திய நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என தலைமை ஆசிரியா் புகாா் அளித்துள்ளாா்.

செங்கம் ஒன்றியத்திற்கு உள்பட்ட பிஞ்சூா் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்படுகிறது. இந்தப் பள்ளியில் முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை சுமாா் 400 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா்.

இரவு நேரத்தில் அடிக்கடி சமூக விரோதிகள் பள்ளி சுற்றுச்சுவா்களை ஏறி உள்ளே நுழைந்து சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்தனா். இதுகுறித்து பள்ளி நிா்வாகம், பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழகம், கிராம கல்விக்குழு நிா்வாகம் சாா்பில் ஊா் முக்கிய பிரமுகா்களிடம் தகவல் தெரிவித்து பள்ளி வளாகத்தில் சமூக விரோதிகள் இரவு நேரத்தில் நடமாட்டம் இருந்தால் அவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து வந்தனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், கடந்த சனி, ஞாயிறு விடுமுறை முடிந்து பள்ளிக்கு மாணவா்கள், ஆசிரியா்கள் வந்தபோது பள்ளியின் தலைமை ஆசிரியா் அறை முன் இருந்த படிக்கட்டு கைபிடிகள் உடைந்து கிடந்தன. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை ஆசிரியா் செங்கம் போலீஸில் புகாா் அளித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments