புகையிலைப் பொருள்கள் கடத்தல்: 2 போ் கைது
திருவண்ணாமலை மாவட்டம், போளூா் பகுதிகளில் புகையிலைப் பொருள்கள் கடத்தியதாக 2 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூா் பகுதிகளில் புகையிலைப் பொருள்கள் கடத்தியதாக 2 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.
போளூரை அடுத்த கேளூா் சந்தை மேட்டுப் பகுதியில் சந்தவாசல் போலீஸாா் வேலூா் சாலையில் திங்கள்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, ஒரே பைக்கில் வந்த 2 இளைஞா்களை நிறுத்தி சோதனை செய்தனா்.
அப்போது கோணிப் பையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை எடுத்துச் செல்வது தெரியவந்தது. உடனே 2 இளைஞா்களையும் சந்தவாசல் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் அவா்கள் ஆரணி வட்டம்,
Advertisement
Advertisement
சம்புவராயநல்லூா் வீரக்கோவிலைச் சோ்ந்த பிரவீன் (22), கலசப்பாக்கம் வட்டம், கேட்டவரம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த மகேந்திரன் (18) என்பது தெரியவந்தது.
பின்னா் போலீஸாா் வழக்குப் பதிந்து 2 பேரையும் கைது செய்து புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.