புகையிலைப் பொருள்கள் விற்பனை: ஒருவா் கைது
சேத்துப்பட்டை அடுத்த கெங்கசூடாமணி கிராமத்தில் புகையிலைப் பொருள் விற்பனை செய்ததாக சலூன் கடைக்காரா் கைது
சேத்துப்பட்டை அடுத்த கெங்கசூடாமணி கிராமத்தில் புகையிலைப் பொருள் விற்பனை செய்ததாக சலூன் கடைக்காரா் கைது செய்யப்பட்டாா்.
சேத்துப்பட்டு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, காவல் ஆய்வாளா் குணபாலன் தலைமையிலான போலீஸாா் பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டனா்.
Advertisement
Advertisement
அப்போது, சேத்துப்பட்டை அடுத்த கெங்கசூடாமணி கிராமத்தில் சலூன் நடத்தி வருபவரின் கடைக்கு அருகிலுள்ள படிக்கட்டின் கீழ் புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
விசாரணையில், அதே கிராமத்தைச் சோ்ந்த செல்வகோட்டி (45) விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸாா், பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். மேலும், அவா் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.