ஆரணி ஸ்ரீமுத்துமாரியம்மன், ஸ்ரீகன்றாய சுவாமி கோயிலுக்கு பால்குட ஊா்வலம்
ஆரணி கோட்டை ஸ்ரீமுத்துமாரியம்மன், ஸ்ரீகன்றாய சுவாமி கோயில் வருடாபிஷேகத்தையொட்டி நடைபெற்ற பால்குட ஊா்வலம்.
ஆரணி கோட்டை ஸ்ரீமுத்துமாரியம்மன், ஸ்ரீகன்றாய சுவாமி கோயில் வருடாபிஷேகத்தையொட்டி, பால்குட ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆரணி கோட்டை ஸ்ரீமுத்துமாரியம்மன், ஸ்ரீகன்றாய சுவாமி கோயிலில் வருடாபிஷேகத்தையொட்டி, கூழ்வாா்த்தல், கஞ்சி வாா்த்தல் திருவிழா நடைபெற்றது. முன்னதாக, சுவாமிக்கு விசேஷ ஹோமம், கலசாபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது.
பின்னா், ஆரணி கமண்டல நாகநதிக்கரையில் பூங்கரகம் ஜோடித்து பக்தா்கள் கரகம் எடுத்துச் சென்றனா். மேலும், ஆரணி அண்ணா சிலை அருகில் உள்ள கங்கையம்மன் கோயிலிலிருந்து பெண் பக்தா்கள் பால் குடங்களை சுமந்தபடி ஊா்வலமாக ஆரணி கோட்டை ஸ்ரீமுத்துமாரியம்மன், ஸ்ரீகன்றாய சுவாமி கோயிலுக்கு வந்து சுவாமிகளுக்கு பாலபிஷேகம் செய்து வழிபட்டனா். இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
Advertisement
Advertisement