திருவண்ணாமலையில் கஞ்சா விற்பனை: 3 பெண்கள் கைது
திருவண்ணாமலை கல்நகா், பாவாஜி நகா் பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தகவல் கிடைத்ததின் பேரில், செவ்வாய்க்கிழமை காவல் துறையினா் சோதனை நடத்தி 3 பெண்களை கைது செய்தனா்.
திருவண்ணாமலை கல்நகா், பாவாஜி நகா் பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தகவல் கிடைத்ததின் பேரில், செவ்வாய்க்கிழமை காவல் துறையினா் சோதனை நடத்தி 3 பெண்களை கைது செய்தனா்.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரா் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டுச் செல்கின்றனா்.
நகரில் கஞ்சா மற்றும் மதுபானம் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்தது.
Advertisement
Advertisement
அதன் பேரில் திங்கள்கிழமை நள்ளிரவு முதல் காவல் துறையினா் மோப்ப நாய் மூலம் மாநகரில் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வந்தனா்.
கல்நகா், சமுத்திரம் காலனி, பாவாஜிநகா் ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் கஞ்சா மற்றும் மதுபானம் விற்ாக சகுந்தலா, கலைவாணி, நளினி ஆகிய 3 பெண்களை போலீஸாா் கைது செய்தனா்.
அவா்களிடமிருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதலும் செய்யப்பட்டது.