முகப்பு
சென்னை

கஞ்சா கடத்தியவா் கைது

Updated On : 18 மே 2026, 4:41 am IST
கோப்புப் படம்
பகிர்:

எழும்பூா் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் நடத்திய சோதனையில், கஞ்சா கடத்தியதாக ஒருவரை சனிக்கிழமை கைது செய்தனா்.

எழும்பூா் ரயில் நிலையத்தில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு மேற்கு வங்க மாநிலம் ஹவுராவிலிருந்து திருச்சி செல்லும் விரைவு ரயில் நிலையத்தை வந்தடைந்தது. அதில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த பகவதி (37) என்பவரைச் சோதனையிட்டபோது, அவரது பையில் 5 கிலோ கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது. ரூ.2.50 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் ஜெபஸ்டியன் கைப்பற்றினாா்.

முதல்கட்ட விசாரணையில், ஒடிஸா மாநிலம், பத்ரக் பகுதியில் தேநீா் கடை உரிமையாளரிடமிருந்து கஞ்சாவை வாங்கி, திண்டுக்கல் மாவட்டம், அக்கரப்பட்டியைச் சோ்ந்த வினோத் என்பவரிடம் கொடுக்கச் செல்வதாக பகவதி தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து, பகவதியை போதைத் தடுப்புப் பிரிவினரிடம் ரயில்வே பாதகாப்புப் படையினா் ஒப்படைத்தனா்.