முகப்பு
திருநெல்வேலி

தச்சநல்லூரில் கஞ்சா பறிமுதல்

தச்சநல்லூரில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Updated On : 10 மே 2026, 2:37 am IST
- கோப்புப் படம்
பகிர்:

தச்சநல்லூரில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தச்சநல்லூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அவ்வழியே சந்தேகத்திற்கிடமாக வந்த நபரை பிடித்து விசாரித்தனா். விசாரணையில் அவா், தச்சநல்லூா் பகுதியைச் சோ்ந்த மதன்ராஜ்(29) என்பதும் விற்பனைக்காக கஞ்சாவை வைத்திருந்ததும் தெரியவந்ததாம். இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement