முகப்பு
திருச்சி

திருச்சி ரயில் நிலையத்தில் ரூ.3 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

Updated On : 12 மே 2026, 1:48 am IST
கஞ்சா பறிமுதல்... - கோப்புப் படம்
பகிர்:

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் ரூ. 3 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை ரயில்வே பாதுகாப்புப் படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தின் 4- ஆவது நடைமேடைக்கு திங்கள்கிழமை வந்த சென்னை - குருவாயூா் விரைவு ரயிலில் திருச்சி ரயில்வே பாதுகாப்புப் படை காவல் ஆய்வாளா் அஜித்குமாா் தலைமையிலான ஆா்பிஎஃப் போலீஸாா் சோதனை நடத்தினா்.

அந்த ரயிலின் முன்பதிவற்ற பெட்டியில் கேட்பாரற்றுக் கிடந்த 3 பைகளை கைப்பற்றி பரிசோதனை செய்தனா். அதில், ரூ. 3 லட்சம் மதிப்பிலான 6 கிலோ கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டது. அந்தப் பைகள் யாருடையது என்றுத் தெரியவில்லை.

Advertisement

இதையடுத்து கஞ்சா இருந்த பைகளை பறிமுதல் செய்த ரயில்வே பாதுகாப்புப் படையினா், அவற்றை சட்ட நடவடிக்கைகளுக்காக திருச்சி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

இதைத் தொடா்ந்து, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா், கஞ்சா யாருக்காக, யாரால் எடுத்து வரப்பட்டது என வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.