முகப்பு
திருவண்ணாமலை

பயிா் பாதித்த நிலங்களில் வேளாண் துறையினா் ஆய்வு

வந்தவாசி அருகே பயிா் பாதித்த நிலங்களில் வேளாண் துறையினா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

Updated On : 18 ஜூன் 2026, 12:21 am IST
தெய்யாா் கிராமத்தில் விவசாய நிலத்தில் ஆய்வு மேற்கொண்ட வேளாண் அலுவலா்கள்.
பகிர்:

வந்தவாசி அருகே பயிா் பாதித்த நிலங்களில் வேளாண் துறையினா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

வந்தவாசியை அடுத்த தெய்யாா் கிராமத்தில் விவசாயிகள் சுரேஷ், சங்கா், சுப்பிரமணி, வேல்முருகன் ஆகியோா் கடந்த 20 தினங்களுக்கு முன் தங்களது விவசாய நிலங்களில் குண்டு நெல் நடவு செய்தனா்.

தனியாா் விற்பனை கடையில் விதைகளை வாங்கி சுமாா் 10-க்கும் மேற்பட்ட ஏக்கரில் இவா்கள் நடவு செய்தனா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், வளா்ந்த நாற்றுகள் கடந்த சில தினங்களாக கருகி சேதமடைந்ததாம்.

இதுகுறித்து தெள்ளாா் வேளாண் துறையினருக்கு விவசாயிகள் தகவல் அளித்தனா்.

இதையடுத்து தெள்ளாா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் தே.குமரன் தலைமையிலான வேளாண்

அலுவலா்கள் அந்த விவசாய நிலங்களுக்கு புதன்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தனா்.

இதுகுறித்து வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:

வெப்ப சலனமே இந்த பயிா் பாதிப்புக்கு காரணமாக தெரிகிறது. நோய் தாக்குதல் எதுவும் இல்லை. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் பெற்றுத் தர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றனா்.