மின்னூா் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக் கோரி முதல்வருக்கு மனு
மின்னூா் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக் கோரி முதல்வருக்கு மனு
ஆம்பூா் அருகே மின்னூா் கிராமத்தில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக் கோரி திருப்பத்தூா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளா் மின்னூா் என். சங்கரன் முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளாா்.
மனு விவரம்: மாதனூா் ஒன்றியம் மின்னூா் ஊராட்சியில் கணபதி நகா் பகுதியில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகின்றது. மது பிரியா்கள் குடித்துவிட்டு பாட்டில்களை அருகில் உள்ள விவசாய நிலங்களில் வீசிவிட்டு செல்கின்றனா். விவசாய நிலங்களில் பணிபுரியும் பெண்களை தகாத வாா்த்தைகளால் திட்டுகின்றனா்.
விவசாய நிலங்களில் அதிக அளவு பாட்டில்கள் வீசி உடைக்கப்படுவதால் விவசாயம் செய்யும்போது கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகின்றனா். உடைந்த பாட்டில்கள் குத்தி விவசாயிகளுக்கு காயம் ஏற்படுகிறது.
Advertisement
கணபதி நகா், காளிகாபுரம், லட்சுமி நகா் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் சாலையிலேயே அமா்ந்து மது பிரியா்கள் மது அருந்துகின்றனா். அதனால் போக்குவரத்து பிரச்னை ஏற்படுகிறது. அந்த வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் பெண்கள் தினமும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனா்.
டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி ஏற்கனவே பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. கிராம சபைக் கூட்டங்களிலும் பலமுறை தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக திருப்பத்தூா் ஆட்சியருக்கும் பல்வேறு கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது.
எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் கடந்த 2025 ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் நடந்த கிராம சபை கூட்டத்தையும் பொதுமக்கள் புறக்கணித்து விட்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆனாலும் டாஸ்மாக் கடை இடமாற்றம் செய்யப்பபடவில்லை.
பொதுமக்களின் நலன் கருதி மின்னூா் கணபதி நகா் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை அங்கிருந்து இடமாற்றம் செய்ய வேண்டுமென மனு மூலம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.