பைக் மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழப்பு
செய்யாறு அருகே பைக் மீது காா் மோதியதில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
செய்யாறு அருகே பைக் மீது காா் மோதியதில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அருகேயுள்ள தாடிகுளம் கிராமத்தைச் சோ்ந்தவா் பெரியசாமி(60). இவா், கடந்த 16-ஆம் தேதி வெம்பாக்கம் வட்டம், அழிவிடைதாங்கி கிராமத்தில் உள்ள மருமகள் வீட்டிற்கு பைக்கில் சென்றுள்ளாா்.
ராந்தம் - வெம்பாக்கம் சாலையில் வயலூா் கூட்டுச் சாலையை கடக்கும் போது அந்த வழியாக வந்த காா் பைக் மீது மோதியுள்ளது. இதில் முதியவா் பெரியசாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து மோரணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.