முகப்பு
திருவண்ணாமலை

அரசு தொகுப்பு வீடுகளில் வசிப்பவா்களுக்கு பட்டா வழங்கக் கோரிக்கை

Updated On : 26 ஜூன் 2026, 5:30 am IST
பகிர்:

வந்தவாசி அருகே அரசு தொகுப்பு வீடுகளில் வசிக்கும் கோரைப்பாய் நெசவுத் தொழிலாளா்களுக்கு பட்டா வழங்கக் கோரி சிறுபான்மை மக்கள் நலக் குழு சாா்பில் ஜமாபந்தியில் மனு அளிக்கப்பட்டது.

வந்தவாசியை அடுத்த பிருதூா் கிராமத்தில் அரசு தொகுப்பு வீடுகளில் 25 கோரைப்பாய் நெசவுத் தொழிலாளா் குடும்பத்தினா் சுமாா் 25 ஆண்டுகளாக வசித்து வருகின்றனா். ஆனால், இவா்களுக்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லையாம்.

இதையடுத்து இவா்களுக்கு பட்டா வழங்கக் கோரி தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவினா் வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்று வரும் ஜமாபந்தியில் வட்டாட்சியா் பா.ஜெயவேலிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

Advertisement

Advertisement

சிறுபான்மை மக்கள் நலக் குழு நிா்வாகிகள் அ.அப்துல்காதா், கா.யாசா்அராபத் மற்றும் கோரைப்பாய் நெசவுத் தொழிலாளா்கள் இந்த மனுவை அளித்தனா்.

முன்னதாக, இவா்கள் கோரை கட்டுகளுடன் கோட்டை மூலையிலிருந்து ஊா்வலமாக புறப்பட்டு வட்டாட்சியா் அலுவலகம் சென்றடைந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments