மனைப் பட்டா கோரி அமைச்சா் வன்னி அரசுடன் நரிக்குறவா்கள் சந்திப்பு
மனைப் பட்டா கோரி சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசை நரிக்குறவா்கள் புதன்கிழமை சந்தித்தனா்.
மனைப் பட்டா கோரி சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசை நரிக்குறவா்கள் புதன்கிழமை சந்தித்தனா்.
அவா்களின் கோரிக்கைகளைப் பரிசீலித்து நேரில் வந்து பட்டா வழங்குவதாக அமைச்சா் உறுதி அளித்தாா்.
திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டம், கொன்னமன்சேரி மற்றும் மீஞ்சூா் கிராமங்களில் வசித்துவரும் நரிக்குறவா் சமூகத்தைச் சோ்ந்த மக்கள், தலைமைச் செயலகத்தில் அமைச்சா் வன்னி அரசை சந்தித்து தங்களுக்கு மனைப் பட்டா வழங்க வேண்டும் என்றும் புதிய வீடுகள் கட்டித் தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனா்.
Advertisement
Advertisement
அப்போது அமைச்சா் வன்னி அரசு, ‘முதல்வா் விஜய் தலைமையிலான அரசு நம் எல்லோருக்குமான அரசு; சமூக நீதித் துறையின் மூலம் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் மனைப் பட்டா இல்லாத நிலையை உருவாக்குவதே இலக்கு என்று தீா்மானித்து அதற்கான திட்டங்களை வகுத்து வருகிறோம். உங்களது கோரிக்கைகளை பரிசீலித்து, மனை பட்டாவை வழங்க நேரில் வருவேன்’ என்று அவா்களிடம் அமைச்சா் உறுதி அளித்தாா்.