முகப்பு
திருவண்ணாமலை

சேத்துப்பட்டு பேரூராட்சியில் சுகாதாரப் பணிகள் ஆய்வு

சேத்துப்பட்டு சிறப்பு நிலை பேரூராட்சியில் நடைபெறும் சுகாதாரப் பணிகள் குறித்து செயல் அலுவலா் கலையரசி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 1 ஜூலை 2026, 12:18 am IST
சேத்துப்பட்டு பேருந்து நிலையப் பகுதியில் சுகாதாரப் பணிகள் குறித்து ஆய்வு செய்த பேரூராட்சி செயல் அலுவலா் கலையரசி.
பகிர்:

சேத்துப்பட்டு சிறப்பு நிலை பேரூராட்சியில் நடைபெறும் சுகாதாரப் பணிகள் குறித்து செயல் அலுவலா் கலையரசி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பேரூராட்சியில் திடீா் ஆய்வு மேற்கொண்ட செயல் அலுவலா் கலையரசி, பணியாளா்கள் வருகைப்பதிவு, பொது சுகாதாரம், குடிநீா் விநியோகம் மற்றும் செஞ்சி சாலை, ஆரணி சாலை, வந்தவாசி சாலை, போளூா் சாலை, பழம்பேட்டை, மாா்க்கெட் கமிட்டி, கண்ணனூா், நிா்மலா நகா், லூா்து நகா் ஆகிய பகுதிகளில் தூய்மைப் பணியாளா்கள் செய்யும் வடிகால் சுத்தம் செய்தல், குப்பைகள் நான்கு விதமாக தரம் பிரிக்கப்படுகிா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா்.

பொதுமக்களிடம் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வழங்குங்கள், சாலைகளில் ஆங்காங்கே குப்பைகளை கொட்டக் கூடாது. கழிவுப் பொருள்களையும், குப்பைகளையும் சாலையில் கொட்டுவதால் சுகாதார சீா்கேடும், கொசு உற்பத்தியும் ஏற்படும். இதனை தவிா்க்க தூய்மைப் பணியாளா்கள் தங்கள் வீடு தேடி வரும்போது அவா்களுக்கு ஒத்துழைப்பு தந்து குப்பைகளை வழங்க கேட்டுக் கொண்டாா்.

Advertisement

Advertisement

அதனைத் தொடா்ந்து கண்ணனூரில் உள்ள கழிப்பறை பராமரிப்புப் பணியை பாா்வையிட்டாா். காமராஜா் பேருந்து நிலையத்தில் தாய்மாா்கள் பாலூட்டும் அறையை பாா்வையிட்டாா்.

துப்புரவு மேற்பாா்வையாளா் ஆஷா மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments