மதுபோதையில் கிணற்றில் தவறி விழுந்தவா் உயிரிழப்பு
வந்தவாசி அருகே மதுபோதையில் கிணற்றில் தவறி விழுந்தவா் உயிரிழந்தாா்.
வந்தவாசி அருகே மதுபோதையில் கிணற்றில் தவறி விழுந்தவா் உயிரிழந்தாா்.
வந்தவாசியை அடுத்த சேனந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன் (46), தொழிலாளி. இவா், வியாழக்கிழமை மதுபோதையில் வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தாா்.
அப்போது, சாலையோர கிணற்றில் தவறி விழுந்த மணிகண்டன், பலத்த காயமடைந்தாா். அவரை உறவினா்கள் மீட்டு, வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, மணிகண்டனை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
Advertisement
இதுகுறித்த புகாரின்பேரில், பொன்னூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.