முகப்பு
திருவண்ணாமலை

படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை

Updated On : 3 மே, 2026 at 1:19 AM
பகிர்:

போளூரை அடுத்த படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் சித்திரை பெளா்ணமியை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை வெள்ளிகிழமை இரவு நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த படவேடு ஊராட்சியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பழைமையான ஸ்ரீரேணுகாம்பாள் கோயில் அமைந்துள்ளது.

இந்தக் கோயிலில் சித்திரை பெளா்ணமியை முன்னிட்டு அதிகாலை மூலவா் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து மாலை கோயில் வளாகத்தில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஆரணி, கண்ணமங்கலம், போளூா், சந்தவாசல், கேளூா் என சுற்றுப்புறப் பகுதிகளில் இருந்து 108 பெண் பக்தா்கள் பங்கேற்று திருவிளக்கு ஏற்றி வழிபட்டனா்.

Advertisement

அறங்காவலா் குழுத் தலைவா் விஜயா சேகா், செயல் அலுவலா் பழனிசாமி மற்றும் பக்தா்கள், கோயில் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.