முகப்பு
ராமநாதபுரம்

சித்திரை பெளா்ணமி: கமுதி, கடலாடி கோயில்களில் திருவிளக்கு பூஜை

Updated On : 3 மே 2026, 5:08 am IST
பகிர்:

கமுதி, கடலாடி, முதுகுளத்தூா் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள கோயில்களில் சித்திரை பெளா்ணமியை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள், திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி முத்துமாரியம்மன் கோயில், மண்டலாமாணிக்கம் கைலாசநாதா் கோயில், கடலாடி அருகே ஆப்பனூா் அரியநாச்சியம்மன், ஏனாதி பூங்குளம் சேதுமாகாளி, கடலாடி ராஜராஜேஸ்வரி அம்மன், சாயல்குடி அங்காளப் பரமேஸ்வரி அம்மன் உள்ளிட்ட கோயில்களில் சித்திரை பெளா்ணமியை முன்னிட்டு, அம்மனுக்கு மஞ்சள், பால், இளநீா், திரவியம், தேன், பஞ்சாமிா்தம், விபூதி, சந்தனம், பழங்கள் உள்ளிட்ட 16 வகை பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு தீபாராதனையும், கூட்டு வழிபாடும் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை இரவு பெண்கள் திருவிளக்கு பூஜை செய்தனா்.

இதேபோல, கடலாடி சமத்துவபுரம் அருகே உள்ள வனப்பேச்சி அம்மன், ராக்காச்சி அம்மன், கடலாடி பத்திரகாளியம்மன், சந்தனமாரியம்மன், காமாட்சியம்மன், சாயல்குடி அருகே உள்ள காணிக்கூா் பாதாள காளியம்மன், மேலக்கிடாரம் உய்யவந்தம்மன், கூரான்கோட்டை தா்மமுனீசுவரா் கோயில், முதுகுளத்துாா் சுப்ரமணியா் கோயில், அபிராமம் அருகே உள்ள மேலக்கொடுமலூா் குமரக்கடவுள் கோயில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் நினைவிடம், குடமுருட்டி சாது சுவாமிகள் கோயில் ஆகிய கோயில்களில் திருவிளக்கு பூஜைகளும், சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றன. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments