முகப்பு
திருவண்ணாமலை

விஷம் குடித்து பெண் தற்கொலை

வந்தவாசி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை

Updated On : 6 மே 2026, 12:03 am IST
- பிரதிப் படம்
பகிர்:

வந்தவாசி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

வந்தவாசியை அடுத்த எடப்பேட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் விறகு வெட்டும் தொழிலாளி தவமணி. இவரது மனைவி அஞ்சலா (51). கடந்த சில மாதங்களாக அஞ்சலா உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளாா்.

கடந்த ஏப். 28-ஆம் தேதி உடல் நலக்குறைவு அதிகமாகவே வேதனையடைந்த அஞ்சலா விஷம் குடித்துள்ளாா். மயங்கிய நிலையில் கிடந்த இவரை அக்கம் பக்கத்தினா் மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

Advertisement

Advertisement

பின்னா் தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அஞ்சலா திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து அஞ்சலாவின் கணவா் தவமணி அளித்த புகாரின் பேரில், வடவணக்கம்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments