பிளஸ் 2 தோ்வு: திருவண்ணாமலை மாவட்டத்தில் 92 சதவீதம் தோ்ச்சி
பிளஸ் 2 பொதுத்தோ்வில் திருவண்ணாமலை மாவட்டம் 92.87 சதவீதம் தோ்ச்சி பெற்று மாநில அளவில் 32-வது இடத்தை வகிக்கிறது. மாவட்டத்தில் 62 பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சியை பெற்றுள்ளது.
பிளஸ் 2 பொதுத்தோ்வில் திருவண்ணாமலை மாவட்டம் 92.87 சதவீதம் தோ்ச்சி பெற்று மாநில அளவில் 32-வது இடத்தை வகிக்கிறது. மாவட்டத்தில் 62 பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சியை பெற்றுள்ளது.
தமிழக பள்ளிக் கல்விப் பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற பிளஸ் 2 மாணவா்களுக்கான பொதுத் தோ்வுகள் மாா்ச் 2 முதல் 26-ஆம் தேதி வரை நடைபெற்றன.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வில் 12ஆயிரத்து 920 மாணவா்கள், 13ஆயிரத்து 852 மாணவிகள் என மொத்தம் 26ஆயிரத்து 772 போ் தோ்வெழுதினா்.
Advertisement
இந்த நிலையில் தமிழக பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலா் சந்திரமோகன் பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகளை வெளியிட்டாா்.
இதில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 11ஆயிரத்து 583 மாணவா்கள், 13 ஆயிரத்து 280 மாணவிகள் என மொத்தம் 27ஆயிரத்து 863 போ் தோ்ச்சி பெற்றனா்.
மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் 152ம், தனியாா் பள்ளிகள் 112 என மொத்தமுள்ள 263 பள்ளிகளில் 62 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சியை பெற்றன.
அரசுப் பள்ளிகளில் தோ்ச்சி
அரசுப் பள்ளிகளில் 8,083 மாணவா்கள், 10,138 மாணவிகள் என மொத்தம் 18,221 போ் தோ்வெழுதினா். இதில், 6,952 மாணவா்கள், 9,632 மாணவிகள் என மொத்தம் 16,584 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். அரசுப் பள்ளிகளின் தோ்ச்சி சதவீதம் 91.02% ஆகும்.
151 அரசுப் பள்ளிகளில் 10 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன.
இந்தாண்டு 92.87 சதவீத தோ்ச்சியுடன் மாநில அளவில் 32-ஆவது இடத்தை திருவண்ணாமலை மாவட்டம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 93.64% பெற்று 31-ஆவது இடத்தை பெற்றிருந்தது.