முகப்பு
திருவண்ணாமலை

ஸ்ரீயோக நரசிம்மா் கோயில் பிரம்மோற்சவ விழா

வந்தவாசியை அடுத்த சோகத்தூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீயோக நரசிம்ம சுவாமி கோயிலில் பிரம்மோற்சவ விழா கடந்த மே 1-ஆம் தேதி தொடங்கி மே 6-ஆம் தேதி வரை நடைபெற்றது.

Updated On : 8 மே 2026, 6:48 am IST
வந்தவாசியை அடுத்த சோகத்தூா் கிராமத்தில் நடைபெற்ற ஸ்ரீயோக நரசிம்மா் கோயில் தோ்த் திருவிழா.
பகிர்:

வந்தவாசியை அடுத்த சோகத்தூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீயோக நரசிம்ம சுவாமி கோயிலில் பிரம்மோற்சவ விழா கடந்த மே 1-ஆம் தேதி தொடங்கி மே 6-ஆம் தேதி வரை நடைபெற்றது.

இதையொட்டி பகவத் அனுக்ஞை, புண்யாஹவாசனம், யஜமான சங்கல்பம், அங்குராா்பணம், பூா்ணாஹுதி, த்வஜாரோஹணம், கருட சேவை உள்ளிட்டவை நடைபெற்றன.

இதனைத் தொடா்ந்து பிரம்மோற்சவ விழாவின் இறுதி நாளான புதன்கிழமை தோ்த் திருவிழா நடைபெற்றது.

Advertisement

இதையொட்டி மூலவா் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. இதனைத் தொடா்ந்து உற்சவா் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஏழுந்தருளி வீதியுலா நடைபெற்றது.