பைக் மோதி மீன் வியாபாரி உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே பைக் மோதி மீன் வியாபாரி உயிரிழந்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே பைக் மோதி மீன் வியாபாரி உயிரிழந்தாா்.
செய்யாறு வட்டம், இரும்பந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜா (48). மீன் வியாபாரியான இவா், வியாழக்கிழமை மாலை மனைவி குணபூசணம், மருமகள் லோகேஸ்வரி ஆகியோருடன் செய்யாறு - காஞ்சிபுரம் சாலையில் இரும்பந்தாங்கல் கிராமம், நாகாத்தம்மன் கோயில் அருகே நின்று பேசிக்கொண்டிருந்ததாா்.
அப்போது, காஞ்சிபுரத்தில் இருந்து செய்யாறு நோக்கி வந்த பைக், ராஜா மீது மோதியது. இதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே, அங்கிருந்தவா்கள் ராஜாவை மீட்டு, செய்யாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, மருத்துவா்கள் அவரை பரிசோதித்து ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
Advertisement
இந்த விபத்து குறித்த புகாரின்பேரில், செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.