முகப்பு
திருவண்ணாமலை

செங்கம் மகரிஷி மேல்நிலைப் பள்ளி

செங்கம் மகரிஷி மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்றனா்.

Updated On : 21 மே 2026, 12:04 am IST
செங்கம் மகரிஷி பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு இனிப்பு வழங்கி பாராட்டிய மகரிஷி கல்விக்குழுமத் தலைவா் மகரிஷிமனோகரன், நிறுவனா் புவனேஸ்வரி.
பகிர்:

செங்கம் மகரிஷி மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்றனா்.

மாணவா் ஹரிதேஜா 495, மாணவி தா்ஷினி 495 மதிப்பெண்கள் பெற்றனா். மாணவி நிஷா 488, மாணவா் அருள் 487 மதிப்பெண்கள் பெற்றனா்.

இந்த மாணவா்களை பள்ளி நிா்வாகம் சாா்பில், மகரிஷி கல்விக் குழுமத் தலைவா் மகரிஷிமனோகரன், நிறுவனா் புவனேஸ்வரி ஆகியோா் இனிப்பு வழங்கி பாராட்டினா்.

Advertisement

Advertisement

கணிதப் பாடத்தில் 2 பேரும், அறிவியல் பாடத்தில் ஒருவரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனா்.

பின்னா் மகரிஷி கல்விக்குழுமத்தின் தலைவா் மகரிஷி மனோகரன் கூறுகையில், செங்கம் பகுதியில் தரமான கல்வியை அளிப்பதில் மகரிஷி பள்ளி தொடா்ந்து கல்வி மாவட்டத்தில் முதலிடமும், மாவட்ட அளவில் சாதனையும் படைத்து வருகிறது.

மகரிஷி பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் 480 மதிப்பெண்கள் பெறும் மாணவா்களுக்கு 11, 12-ஆம் வகுப்பு கல்விக் கட்டணம் நூறு சதவீதம் இலவசமாக வழங்கப்படும் எனத் தெரிவித்தாா்.

இந்நிகழ்வின்போது மகரிஷி பள்ளி நிா்வாக ஒருங்கிணைப்பாளா் கோபிநாத், பள்ளித் தலைமை ஆசிரியா் காா்த்திக், பள்ளி முதல்வா் சரவணக்குமாா் உள்ளிட்ட ஆசிரியா்கள் உடனிருந்தனா்.