தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணி: அதிகாரிகள் ஆய்வு
ஆம்பூர் நகர பகுதி எல்லைக்குள் தேசிய நெடுஞ்சாலை 6 வழிச் சாலையாக விரிவாக்கம் செய்வதற்கான பணிகள் தொடங்க உள்ளது.
ஆம்பூர் நகர பகுதி எல்லைக்குள் தேசிய நெடுஞ்சாலை 6 வழிச் சாலையாக விரிவாக்கம் செய்வதற்கான பணிகள் தொடங்க உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனர்.
ஆம்பூர் எம்சி ரோடு என்று அழைக்கப்படும் தேசிய நெடுஞ்சாலை 6 வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி பல ஆண்டுகளாக தொடங்கப்படாமல் காலதாமதம் ஆனது.
கிராமப் பகுதிகளில் 6 வழிச்சாலை விரிவாக்கப் பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டில் உள்ளது. தற்போது ஆம்பூர் நகர பகுதி எல்லைக்குள் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் தொடங்கப்பட உள்ளது. நகர பகுதிக்குள் விபத்து ஏற்படாமல் தடுப்பதற்காக மேம்பாலம் அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது. பணிகள் தொடங்கப்படும்போது, போக்குவரத்து தடைபடாமல் இருக்க மேற்கொள்ளப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.