பாமக 30-ஆம் ஆண்டு தொடக்க விழா
குடியாத்தம் நகர பாமக சார்பில், கட்சியின் 30-ஆம் ஆண்டு தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
குடியாத்தம் நகர பாமக சார்பில், கட்சியின் 30-ஆம் ஆண்டு தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, பலமநேர் சாலையில் பிச்சனூரிலும், நகராட்சி அலுவலகம் எதிரிலும், காமராஜர் பாலம் அருகிலும், கோபாலபுரத்திலும் கட்சிக் கொடி ஏற்றி வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு மாம்பழங்கள், இனிப்பு ஆகியன வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு, பாமக நகரச் செயலர் ஏ. சௌந்தரராஜன் தலைமை வகித்தார். முன்னாள் மத்திய அமைச்சர் என்.டி. சண்முகம், மாநில துணைப் பொதுச் செயலர் கே.எல். இளவழகன் ஆகியோர் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினர்.
மாவட்டச் செயலர் ஜி.கே. ரவி, மாவட்ட அமைப்புச் செயலர் பாலாஜி, மாநில வன்னியர் சங்கத் துணைத் தலைவர் சுரேஷ்குமார், மாநில அமைப்புச் செயலர் வெங்கடேசன், மாநில இளைஞர் அணி துணைச் செயலர் நா. குமார், மாவட்ட சிறுபான்மைப் பிரிவுச் செயலர் என்.நூருதீன், நகரத் தலைவர் விஜயகுமார், நகர அமைப்புச் செயலர்கள் எஸ். குமார், விஸ்வநாதன், வன்னியர் சங்க நகரச் செயலர் மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.