முகப்பு
வேலூர்

ஜூலை 1 முதல் விழுப்புரம்-காட்பாடி-திருப்பதி விரைவு ரயில் சேவை

 விழுப்புரம் - காட்பாடி - திருப்பதி இடையிலான பயணிகள் ரயில் சேவை விரைவு ரயிலாக மாற்றப்பட்டு வருகிற ஜூலை 1-ஆம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Updated On : 24 ஜூன் 2022, 11:57 pm IST
பகிர்:

 விழுப்புரம் - காட்பாடி - திருப்பதி இடையிலான பயணிகள் ரயில் சேவை விரைவு ரயிலாக மாற்றப்பட்டு வருகிற ஜூலை 1-ஆம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

திருப்பதி செல்லும் பக்தா்களுக்காகவும், வேலூருக்கு சிகிச்சைக்காகவும், பணி நிமித்தமாகவும் வந்து செல்லும் பொதுமக்களுக்காகவும் இந்த ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வந்தன.

இதையேற்று காட்பாடி - திருப்பதி, விழுப்புரம் - திருப்பதி, காட்பாடி - விழுப்புரம் ரயில்களை ஜூலை 1-ஆம் தேதி முதல் விரைவு ரயில்களாக இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

அதன்படி, விழுப்புரம் - திருப்பதி விரைவு ரயிலானது தினமும் மாலை 5.20 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டு காட்பாடிக்கு இரவு 8.45 மணிக்கு வந்தடையும். பின்னா், திருப்பதிக்கு இரவு 11 மணிக்கு சென்று சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், திருப்பதி - காட்பாடி விரைவு ரயிலானது அதிகாலை 2.35 மணிக்கு திருப்பதியில் இருந்து புறப்பட்டு காட்பாடிக்கு காலை 4.55 மணிக்கு வந்து சேரும்.

காட்பாடி - விழுப்புரம் விரைவு ரயிலானது காட்பாடியில் இருந்து காலை 6.45 மணிக்கு புறப்பட்டு விழுப்புரத்துக்கு காலை 10.45 மணிக்கு சென்று சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments