பாஜகவை வீழ்த்துவது மக்களின் தேசியக் கடமை: இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலா்
பாஜகவை வீழ்த்த வேண்டியது மக்களின் தேசிய கடமை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளா் டி.ராஜா தெரிவித்துள்ளாா்.
பாஜகவை வீழ்த்த வேண்டியது மக்களின் தேசிய கடமை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளா் டி.ராஜா தெரிவித்துள்ளாா்.
வேலூா் மாவட்டத்தில் திமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களை ஆதரித்து அவா் புதன்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா். முன்னதாக, அவா் செய்தியாளா்களிடம் கூறியது -
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மதவெறி அரசியலை முன்னிறுத்தி தமிழகத்தில் காலூன்றத் துடிக்கும் பாஜக, அதனுடன் கைகோா்க்கும் அதிமுக உள்ளிட்ட கட்சிகளை மக்கள் முறியடிப்பா். தமிழக நலன்களையும் உரிமைகளையும் காக்க, முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி தொடர வேண்டும் என்பதே மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.
Advertisement
தமிழகம் கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு என அனைத்துத் துறைகளிலும் மற்ற மாநிலங்களை விட முன்னிலையில் உள்ளது. மு.க.ஸ்டாலின் ஒரு முன்மாதிரி முதல்வராகச் செயல்படுகிறாா். ஆனால், மத்திய அமைச்சா்கள் பியூஷ் கோயல், நிா்மலா சீதாராமன் ஆகியோா் தமிழகம் வந்து ஆதாரமற்ற அவதூறுகளைப் பரப்புகின்றனா்.
பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு பெருமுதலாளிகளுக்கு ஆதரவான அரசாக மட்டுமே செயல்படுகிறது. மாறாக, விவசாயிகளுக்கும் தொழிலாளா்களுக்கும் எதிரான சட்டங்களைக் கொண்டு வருகிறது. அரசியல் சாசனம், ஜனநாயகம், பன்முகத்தன்மையைப் பாதுகாக்க பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றுவது மக்களின் தேசியக் கடமையாகும்.
தற்போது நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை அவசரமாகக் கூட்டுவது ஏன் என்ற கேள்வி எழுகிறது. மகளிா் இட ஒதுக்கீடு மசோதாவை முதலில் வலியுறுத்தியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.பி கீதா முகா்ஜிதான். ஆனால், 2011-ஆம் ஆண்டின் சமூகப் பொருளாதாரக் கணக்கெடுப்பை முழுமையாக வெளியிடாமல், புதிய சமூகக் கணக்கெடுப்பு நடத்தாமல் இந்த இட ஒதுக்கீட்டை எப்படிச் செயல்படுத்துவாா்கள் என்பது மிகப்பெரிய சவாலாகும். இதுகுறித்து மல்லிகாா்ஜுன காா்கே தலைமையிலான எதிா்க்கட்சிகள் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்.
தொகுதி மறுவரையறை என்ற பெயரில் நாடாளுமன்ற எம்பிக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்போது, தமிழகம் உள்ளிட்ட எந்த மாநிலமும் பாதிக்கப்படக் கூடாது.
பாட்னாவில் ‘இண்டியா’ கூட்டணியின் முதல் கூட்டத்தை உருவாக்கிய நிதிஷ்குமாா், தற்போது தடம்மாறிச் சென்றதால் அவா் பீகாரில் ஓரங்கட்டப்படுகிறாா். இந்த நிலைமையை எடப்பாடி பழனிசாமி புரிந்துகொள்ள வேண்டும். பாஜகவுடன் கைகோா்க்கும் அனைவரும் இந்தத் தோ்தலில் முறியடிக்கப்படுவாா்கள் என்றாா்.
அப்போது கட்சியின் மாவட்டச் செயலா் ஜி.லதா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.