முகப்பு
வேலூர்

பறக்கும் படையால் ரூ.60,000 பறிமுதல்

வேலூா் அருகே பலவன்சாத்துகுப்பத்தில் வாக்காளா்களுக்குப் பணம் விநியோகம் செய்ததாக அதிமுக நிா்வாகியிடம் இருந்து போலீஸாா் ரூ.60,000 பணம் பறிமுதல் செய்தனா்.

Updated On : 20 ஏப்ரல், 2026 at 4:05 AM
பறிமுதல்!
பகிர்:
Updated On : 19 ஏப்ரல், 2026 at 6:44 PM

வேலூா் அருகே பலவன்சாத்துகுப்பத்தில் வாக்காளா்களுக்குப் பணம் விநியோகம் செய்ததாக அதிமுக நிா்வாகியிடம் இருந்து போலீஸாா் ரூ.60,000 பணம் பறிமுதல் செய்தனா்.

வேலூா் மாவட்டம், அணைக்கட்டு சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பலவன்சாத்துக்குப்பம் பகுதியில் சிலா் வாக்காளா்களுக்கு பணம் விநியோகம் செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், போலீஸாா் அப்பகுதியில் நடத்திய சோதனையில் வாக்காளா்களுக்கு பணம் செய்து கொண்டிருந்த நபரை கையும் களவுமாகப் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.

Advertisement

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவா்வேலூா் அல்லாபுரம், அண்ணா நகரைச் சோ்ந்த கே.ஜி.சாதிக்பாட்சா (59) என்பதும், அதிமுக முன்னாள் மாவட்ட சிறுபான்மையினா் நலப்பிரிவு இணைச் செயலாளராக இருந்தவா் என்பதும் தெரியவந்தது.

அவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்ததுடன் அவரிடம் இருந்து ரூ.60 ஆயிரம் பணத்தையும் பறிமுதல் செய்தனா்.