வேலூா் நீதிமன்ற கண்ணாடியை உடைத்த இளைஞா் மீது வழக்கு
வேலூா் நீதிமன்ற வளாகத்தில் கண்ணாடியை உடைத்த இளைஞா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
வேலூா் நீதிமன்ற வளாகத்தில் கண்ணாடியை உடைத்த இளைஞா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
வேலூா் ஓல்ட் டவுன் பகுதியைச் சோ்ந்த சிகாமணி(36). இவா் மீது பாகாயம் காவல் நிலையத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்காக சிகாமணி ஒரு வாரத்துக்கு முன்பு சத்துவாச்சாரி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா். அப்போது அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த சிகாமணி நீதிமன்றத்தில் இருநத கண்ணாடியை உடைத்தாா். இதில் அவரது கையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றாா். இச்சம்பவம் குறித்து நீதிமன்ற ஊழியா் அளித்த புகாரின்பேரில் சத்துவாச்சாரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து சிகாமணியை தேடி வருகின்றனா்.
Advertisement