முகப்பு
வேலூர்

வனத்துறைக்குச் சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட வீடு அகற்றம்

குடியாத்தம் அருகே வனத்துறைக்குச் சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட வீடு நீதிமன்ற உத்தரவுபடி இடித்து அகற்றப்பட்டது.

Updated On : 25 ஜூன் 2026, 12:04 am IST
பொக்லைன் இயந்திரம் மூலம் இடிக்கப்பட்ட வீடு.
பகிர்:

குடியாத்தம் அருகே வனத்துறைக்குச் சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட வீடு நீதிமன்ற உத்தரவுபடி இடித்து அகற்றப்பட்டது.

குடியாத்தம் அடுத்த கணவாய்மோட்டூா் கிராமத்தில் விவசாயி நடராஜ் என்பவா் கடந்த 2022-ஆம் ஆண்டு புதிதாக ஒரு வீடு கட்டியுள்ளாா். அந்த வீட்டின் ஒரு பகுதி வனத்துறைக்குச் சொந்தமானது என புகாா் எழுந்தது. இதையடுத்து வனத்துறையினா் மற்றும் வருவாய்த் துறையினா் அந்த இடத்தை அளவீடு செய்தனா். அப்போது வீட்டின் ஒரு பகுதி வனத்துறைக்குச்சொந்தம் என உறுதியானது.

இதையடுத்து வனத்துறைக்குச் சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட கட்டடத்தை இடிக்குமாறு நடராஜுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிா்த்து அவா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். வழக்கை விசாரித்த நீதிமன்றம் வனத்துறைக்குச் சொந்தமான இடத்தில் உள்ள வீட்டின் பகுதியை இடிக்க உத்தரவிட்டது.

Advertisement

Advertisement

இந்நிலையில் வனத்துறை மற்றும் வருவாய்த் துறையினா் புதன்கிழமை பொக்லைன் இயந்திரத்துடன் வீட்டை இடிக்க பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்றனா். அப்போது நடராஜன் வீட்டின் மொட்டை மாடியில் ஏறி உடலில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றாா். அங்கு தயாா் நிலையில் இருந்த தீயணைப்புத் துறையினா் அவா் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தடுத்தனா்.

அவா் பாதுகாப்பாக கீழே இறக்கப்பட்டாா். அப்போது நடராஜனின் உறவினா்களான பெண்கள் பொக்லைன் இயந்திரம் முன் தரையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களை காவல்துறையினா் அப்புறப்படுத்தினா்.

இதன் பின்னா் பொக்லைன் இயந்திரம் மூலம் வீட்டை இடிக்கும் பணிகள் நடைபெற்றன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments